தினமும் காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் இதனை தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாக தற்போது இருக்கும் அவசர உலகில் பசி எடுக்கும் பொழுது கையில் மாட்டும் ஒரே பொருள் பிஸ்கட் தான்.

காலையுணவிற்கு பதிலாக பிஸ்கட், டீ இவை இரண்டையும் சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள்.

வெளியில் எங்கு சென்றாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பிஸ்கட் சாப்பிடுவார்கள்.

இத்தணை சந்தர்ப்பங்களில் உதவிச் செய்யும் பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? என பலருக்கும் சந்தேகம் இருக்கும்.

அந்த வகையில் பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? என்பதற்கான விடையை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தினமும் பிஸ்கட் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

1. எவ்வளவு மூலப்பொருட்கள் பிஸ்கட்டில் கலந்திருந்தாலும் அது ஒரு வெற்று கலோரி என நிபுணர்க்ள கூறுகின்றனர். இதனால் தினமும் பிஸ்கட் சாப்பிடுவதால் எந்தவிதமான பயனும் இல்லை.

2. சிலர் வீடுகளில் காலையுணவாக பிஸ்கட் மற்றும் டீயை கொடுப்பார்கள். அந்த நேரத்தில் இருக்கும் பசியை போக்குமே தவிர அதனால் எந்த விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கபோவதில்லை.

3. தொடர்ச்சியாக சாப்பாட்டிற்கு பதிலாக பிஸ்கட் எடுத்து கொண்டால் பிஸ்கட்டில் இருக்கும் கோதுமை மலச்சிக்கல் பிரச்சினையை உண்டு பண்ணும்.

4. பிஸ்கட்டுகளில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், உடலில் அதிக ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு பங்களிப்பு செய்யும்.

5. டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட பின்னர் சரியாக 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடுங்கள். ஏனெனின் டீயில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு சத்துக்கள் உணவிலுள்ள இரும்புச்சத்தை உறிஞ்சி வைத்து கொள்ளும்.