தலைமன்னார் சிறுமி கொலை விவகாரம் சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்புனவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது மீண்டும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி, கடந்த 16ஆம் திகதி காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

தாய், தந்தை, அம்மம்மா உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை
அதே கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கடந்த 19ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.