பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான செய்தி!

எரிபொருள் விலையில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஊடக அறிவிப்பை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பு மேலே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் இன்று (01-02-2024) முற்பகல் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.