புதிய வீடு கட்டியுள்ள பிரபல சீரியல் நடிகை சரண்யா துரடி

சரண்யா துரடி
சினிமா நடிகைகளை தாண்டி சின்னத்திரை நாயகிகளுக்கு தான் இப்போது ரசிகர்களிடம் மவுசு உள்ளது. சீரியல்களில் நடிப்பவர்கள் தினமும் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

சீரியல் நடிகைகளும் மக்களிடம் பிரபலமாக நிறைய போட்டோ ஷுட் நடத்தி அவர்களுக்கு நெருக்கமாகி வருகிறார்கள்.

இப்போது ஒரு சீரியல் நடிகை பற்றிய சூப்பரான செய்தி தான் உலா வருகிறது, அதாவது செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக மாறிய சரண்யா துரடி ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.

புதிய வீடு
அதாவது நடிகை சரண்யா பல போராட்டங்களுக்கு பிறகு தனது கனவு இல்லத்தை கட்டியுள்ளாராம்.

தனது புதிய வீட்டில் முதல் கார்த்திகை தீபம் என ஸ்பெஷல் தினத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.