ரொறன்ரோவில் மூடப்படும் கோவிட் தடுப்பூசி நிலையங்கள்

ரொறன்ரோவில் பெருந்தொற்று காலத்தில் இயங்கி வந்த தடுப்பூசி நிலையங்கள் முழுமையாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் நான்கு இடங்களில் இவ்வாறு கோவிட்19 தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாகாண அரசாங்கம் வழங்கி வந்த நிதியுதவிகள் நிறைவு பெறுவதாகவும் இதனால் குறித்த தடுப்பூசி நிலையங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நோர்த் யோர்க் சிவிக் சென்டர், கொல்வர்டேல் மோல், மெற்றோ ஹால் மற்றும் ஸ்காப்றோ தடுப்பூ நிலையம் என்பன நிரந்தரமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.