மூல நோயை விரட்டியடிக்கும் வெற்றிலை!

பொதுவாக மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மலம் கழிப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.

அவர்கள் மலம் கழிக்க சிரமப்படும் பொழுது இரத்தப்போக்கு கூட சில சமயங்களில் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

இதற்கான சிகிச்சை சரியாக எடுக்கவில்லையென்றால் உயிர் ஆபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மருந்து வில்லைகளை விட நாம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு கை வைத்தியம் செய்து வந்தால் நோய் நிரந்தரமாக குணமாகும் என்கிறார்கள். அந்த வகையில் மூல நோயாளர்களின் மருந்தாக வெற்றிலை பார்க்கப்படுகின்றது.

வெற்றிலையை கொண்டு செய்யப்படும் சில வைத்திய முறைகள் மூல நோயை விரைவில் குணமாக்கும்.

வெற்றிலையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை இலகுவாக்கி மலம் கழிப்பதற்கு தேவையான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்கின்றது.

இது போன்ற வெற்றிலைக் கொண்டு என்னென்ன செய்யலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

சாப்பிட்டால் என்ன நடக்கும்?

1. வெற்றிலை பச்சையாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் மூல நோயின் தாக்கத்தால் ஆசன வாய்ப் பகுதியில் வலி, எரிச்சல் ஆகியவை ஏற்படுவதோடு வீக்கங்களையும் குறைக்கும்.

2. 3 அல்லது 4 வெற்றிலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து ஆசனவாயில் அப்ளை செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் மூலத்தால் ஏற்பட்ட வீக்கம் குறையும்.

3. ஒரு பாத்திரத்தில் வெற்றிலை 2 போட்டு கொதிக்க விட்டு காலை, மாலை என இரண்டு வேளைகளும் குடித்து வந்தால் மூல நோய் இடம் தெரியாமல் மறைந்து விடும்.

4. குடல் சுருக்கம், வயிறு வலி, சாப்பிட முடியாமல் சிரமப்படுதல் ஆகிய வியாதிகளுக்கும் வெற்றிலையில் தீர்வு இருக்கின்றது.

5. வெற்றிலையை பாக்கு கலந்து பீடா போல் சாப்பிடுவதை விட தனியாக சாப்பிடுவதால் ஏகப்பட்ட பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.