ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் தவிக்கும் விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி
கடந்த 2005ம் ஆண்டு வெளியான சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின் நான் படத்தின் மூலம் நடிகரானார்.

நடிப்பு, இசை, படத்தொகுத்து என எல்லாவற்றிலும் கலக்கி வந்த விஜய் ஆண்டனி அண்மையில் படு சூப்பராக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

அவர் நடத்திய நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, சில வீடியோக்களும் வைரலாகி வந்தது.

நடிகரின் தவிப்பு
அண்மையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்பு தமிழக மக்கள் அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் விஜய் ஆண்டனிக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டது வருத்தமாக இருக்கிறது என பதிவு போட்டார்.

அதைப்பார்த்த ரசிகர் ஒருவர் இப்போது விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார் என கேட்க, அதற்கு அவர் பல மணி நேரமாக அவர் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை, அவர் இப்படி கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை என டுவிட் போட்டுள்ளார்.