பாண்டியன் ஸ்ரோர் சீரியலை விட்டு விலகும் நடிகை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கு மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 1,200 எபிசோடுகளை எட்டியுள்ளது.

டாப் சீரியல்கள் விஜய் டிவி லிஸ்டில் எடுத்தால் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வந்துவிடும், அந்த அளவிற்கு அழகான சீரியலாக மக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த தொடர் கடந்த சில வாரங்களாக முடிவுக்கு வரப்போகிறது என்று கூறப்பட்டு வருகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.


கதை என்னவோ பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவது போல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திடீரென விலகிய நடிகை
இந்த நேரத்தில் தான் சீரியல் குறித்து ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது. அதாவது தனம், மீனா, முல்லை, ஐஸ்வர்யாவை விட அதிக ரசிகர்களை கொண்ட குழந்தை நட்சத்திரம் கயல் பாப்பா தான் தொடரை விட்டு விலக இருக்கிறாராம்.