மாமனார் வீட்டில் அவமானப்படுத்தப்படும் ஜீவா

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா தனது அண்ணன் மூர்த்தியிடம் இருந்து பிரிந்து, தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மீண்டும் எப்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றினையும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

தன்னுடைய மாப்பிள்ளை ஜீவாவிற்கு ஜனார்த்தனன் Department store-ஐ பார்த்துக்கொள்ளும் பொறுமை ஒப்படைத்தார்.

வரும் வாரம் ப்ரொமோ
அதை உரிமையோடு எடுத்து செய்து வந்த ஜீவா ஜனார்த்தனனிடம் கேட்காமல் சில முக்கிய முடிவை எடுத்துவிட்டார். இதனால் கடுப்பான ஜனார்த்தனன் என்னை கேட்காமல் இனி முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம் என ஜீவாவிடம் கூறிவிடுகிறார்.

இதே போல் இரண்டு முறை நடக்கிறது. இதனால் ஜீவா மாமனார் வீட்டில் அவமானத்தை சந்திக்கிறார். இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.