வானத்தை போல சீரியலில் இருந்து விலகும் பிரபலம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் “வானத்தைப்போல” சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த தொடர் முற்றிலும் அண்ணன் தங்கையை மையமாக வைத்து கதை சென்று கொண்டு இருக்கிறது.

வானத்தை போல
இந்நிலையில் இந்த சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் பெங்காலி நடிகை தேப்ஜானி நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ராசாத்தி என்ற சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது இவர் சில காரணங்களால் வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.