தற்கொலைக்கு முயன்ற இனியா எடுக்க போகும் முடிவு என்ன?

இனியா தற்கொலைக்கு முயற்சி
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் எபிசோடில் இனியா தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இனியா மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது குணமடைந்துள்ளார்.

தனது மகள் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த பாக்கியா தனது குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இனியா எடுக்கபோகும் முடிவு என்ன
கோபி மற்றும் ராதிகாவால் தான் இனியா இப்படி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பதினால் தனது மகளை பாக்கியா தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார்.

ஆனால், கோபி தன்னுடைய மகள் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என கூறி அடம்பிடிக்கிறார்.

உயிர் பிழைத்த இனியா தற்போது தனது தாய் பாக்கியாவுடன் செல்ல போகிறாரா அல்லது மீண்டும் தனது தந்தை கோபியுடன் செல்ல போகிறாரா என்பதை வரும் வாரம் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.