வடக்கன்கள் குறித்து வைரலாகும் விஜய் ஆண்டனியின் பதிவு

வடக்கன்
தமிழ்நாட்டில் சமீப காலமாக வட இந்தியாவில் இருந்து அதிகம் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதால் தமிழக தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஹோட்டல், கட்டிட வேலை தொடங்கி விவசாய வேலை வரை அனைத்திலும் அவர்கள் இருக்கின்றனர்.

இது பற்றி சமூக வலைத்தளங்களில் அவரகளை வடக்கன்ஸ் என சொல்லி விமர்சிக்கின்றனர். அவர்களை ட்ரோல் செய்து கோபி சுதாகர் யூடியூபில் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரல் ஆனது.

விஜய் ஆண்டனியின் ட்வீட்
இந்நிலையில் இந்த விஷயம் பற்றி நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட் செய்து இருக்கிறார்.

“வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என ட்விட் செய்து இருக்கிறார்.

வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.