விஷால் – நந்தா – ரமணா
விஷாலின் நெருங்கிய நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா. இவர்கள் இருவரும் விஷாலை வைத்து லத்தி எனும் படத்தை தயாரித்திருந்தார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்தது. இதனால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இப்படத்தின் தோல்வியால் விஷால், நந்தா மற்றும் ரமணா நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நட்புக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாம்.
காரணம் இதுதானா
அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் நடிகர் விஷாலுக்கு ரூ. 1 கோடி சம்பள பாக்கியும் தரவில்லையாம். இதனால் இருவர் மீதும் விஷால் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தில் பணிபுரிந்து யூனிட்டுக்கு கூட ரூ. 1.5 கோடி வரை சம்பளத்தை பாக்கி வைத்துள்ளார்களாம்.
அவர்கள் ரமணா மற்றும் நந்தாவிடம் இதை கேட்காமல் விஷாலிடம் நேரடியாக சென்று கேட்பதாலும், விஷால் கடுப்பில் உள்ளார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.