துருக்கி நிலநடுக்கத்தில் கால்பந்தாட்ட வீரர் பலி

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் பூகம்பத்தினால் உயிரிழந்துள்ளார். அஹமத் ஐயுப் டர்கஸ்லான் என்ற கால்பந்தாட்ட வீரர் உயிரிழந்துள்ளார் என அவரது கழகமான யெனி மாலத்யஸ்போர் தெரிவித்துள்ளது.

எங்களின் கோல்காப்பாளர் பூகம்பத்தின் இடிபாடுகளிற்குள் சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என என அவரது கழகமான யெனி மாலத்யஸ்போர் தெரிவித்துள்ளது.

அதோடு நாங்கள் உங்களை மறக்கமாட்டோம் அழகான நபரே என கழகம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது. துருக்கி , சியாவை தாக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்துள்ளமை உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள்ளது.