தனக்கு வந்த பாலியல் அழைப்பு குறித்து ஓபனாக பேசிய நயன்!

தமிழில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா சினிமாத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பலமுறை சொந்த பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் இவர் ஒவ்வொரு முறையும் வேறலெவல் கம்பேக் கொடுத்து அசர வைப்பார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஆனார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் கனெக்ட் என்ற ஹாரர் படம் வெளியானது. பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா விரைவில் தனது 75-வது படத்தில் நடிக்க உள்ளார். அஜித், விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், Shero படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில், தனக்கு படத்தில் முக்கிய ரோல் கொடுக்க ஒருசிலரிடம் அட்ஜெஸ் செய்யச்சொல்லி கேட்டதாகவும், ஆனால் அந்த சமயம் தனது நடிப்பு மீதான நம்பிக்கையால் துணிந்து நோ சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக பெண்களை தவறாக பயன்படுத்தும் செயல் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. நடிக்க வரும் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல்தொழிலில் சிக்க வைக்கும் கும்பலும் இருந்து தான் வருகிறது. தற்போது தென்னிந்திய சினிமாவிலும் இந்த சூழல் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக பல பிரபலங்களும் கூறி வருகின்றனர்.

நயன்தாரா இப்படி தைரியமாக தனக்கு வந்த தவறான அழைப்பை உடைத்து பேசியுள்ளதை போல சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை அனுஷ்காவும் பேசியுள்ளார். அவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால் ஒருசில பாலியல் ஆசைகளுக்கு அட்ஜெட் செய்ய வேண்டும் என்று சொன்னதாகவும், அதற்கு எதிராக தான் நின்றதாகவும் அனுஷ்கா கூறியுள்ளார். இப்படி முன்னணி நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட Casting Couch பிரச்சனைகள் குறித்து ஓபனாக பேசுவதால் எதிர்காலத்தில் நடிக்கும் ஆசையுடன் வரும் இளம் பெண்களுக்கு இது மேலும் தைரியத்தை கொடுக்கும். இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.