ஓய்வூதியம் பெறுவோறிற்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு மிகப் பெரிய தகவல் ஒன்றை அளித்துள்ளது. அந்த வகையில் நீங்களும் ஓய்வூதியத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி நீங்கள் பெரிய பலன் பெறுவீர்கள். ஆம், 2023-24 யூனியன் பட்ஜெட்டில், ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஆயுதப்படைகளின் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான திருத்தம் மற்றும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக ரூ.28,138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வரும் காலங்களில் பெருமளவில் பயனடைவார்கள்.

எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது
2022-23 நிதியாண்டில் 3,582.51 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 2023-24 நிதியாண்டில் 5,431 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பட்ஜெட் அதிகரித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட ஜாக்பாட் அறிவிப்பு
இந்த மேம்பாடு இந்தியா முழுவதும் உள்ள மூத்த படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு ‘பணமில்லா சுகாதாரம்’ மற்றும் சிறந்த ‘சேவை டெலிவரி’ ஆகியவற்றை உறுதி செய்யும். யூனியன் பட்ஜெட்டில் அக்னிவீர் கோஷுக்கு விலக்கு-விலக்கு-விலக்கு (இ-இ-இ) அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில், பாதுகாப்பு ஓய்வூதிய பட்ஜெட்டில் 15.5 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஓட்டுமொத்தமாக 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் இந்தத் தொகை ரூ.1,38,205 கோடியாகவும், 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் இந்தத் தொகை ரூ.1,19,696 கோடியாகவும் இருந்தது.

மறுபுறம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு (சிவில்) மூலதன ஒதுக்கீடாக ரூ.8 ஆயிரத்து 774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை ஊழியர்களின் ஓய்வூதியத்துக்கு தனியாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் வருவாய் செலவினமாக ரூ.4 லட்சத்து 22 ஆயிரத்து 162 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.