உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றும் நத்தை சூரி விதை!

நத்தை சூரி என்றவுடன், இது ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இதன் வித்தியாசமான பெயருக்கு ஏற்ப, பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. இம்மூலிகை, சித்து வேலைகள் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்க பயன்பட்டதால், சித்தர்கள் இதை மகா மூலிகை என அழைத்தனர். நத்தை சூரி மூலிகையில் நான்கு வகைகள் உள்ளன. இந்த விதையே ஆண்மை குறைபாடு, விந்து முந்துதல், விந்து கலிதம், சொப்பன கலிதம் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சித்த மருத்துவ மருந்துகளில் விதைகளை முறைப்படி சுத்தி செய்து சூரணமாக்கி (துணை மருந்துகளும் உள்ளடக்கியது) ஆண்மை சம்பந்தபட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும். நத்தை சூரி சூரணத்தையும், அமுக்கரா சூரணத்தையும் இருவேளையும் தளா ஒரு கிராம் அளவு பாலில் சாப்பிட்டுவர விந்து கெட்டிப்படும். நத்தை சூரி விதையை பொன்வறுவலாக வறுத்து 400 மில்லி தண்ணீர் விட்டு 100 மில்லியாக சுண்டவைத்து அதனுடன் ஒரு டம்ளர் சுத்த பசும்பால் விட்டு இருவேளை குடித்து வர உடலில் தங்கியுள்ள உள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்கும்.

ஆண், பெண் இருவருக்குமுள்ள, வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும். நத்தை சூரி சூரணத்தை தொடந்து சில மாதங்கள் சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து தளர்ந்த தசைகள் இறுகும். புறா நத்தை சூரி விதைகளை விரும்பி உண்ணுவதனாலயே புறாவின் தசைகள் இறுக்கமாக உள்ளது. நத்தை சூரியின் விதையை, லேசாக வறுத்து பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தினால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள, தேவையற்ற, ரசாயன வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நத்தைச்சூரியின் விதையை பொடித்து, தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் போக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும், அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலை குணமாக்கும். 10 கிராம் நத்தை சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும். இதன் வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது.

உடலைத் தேற்றவும், விந்து பலத்தை அதிகரிக்கவும், விதை தாதுக்களின் எரிச்சலைத் தவிர்க்கவும், தாது வெப்பத்தைத் தணிக்கவும் பயன்படுகின்றது. நத்தைச் சூரி விதையை அரைத்து, நெல்லிக்காயளவு எடுத்து, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து, 2 வேளை சாப்பிட்டு வர, உடல் பலமடையும்; ஆண்மை பலம் அதிகரிக்கும்.