பிக்பாஸ் வீட்டிலிருந்து து வெளியேற்றப்பட்ட ரச்சிதா

பிக்பாஸ் 6
அக்டோபர் 9ம் தேதி இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 20 போட்டியாளர்கள் முதல் நாளில் வீட்டிற்குள் நுழைந்தார்கள், பின் அடுத்த தான் மைனா நந்தினி தனியாக வீட்டிற்குள் நுழைந்தார்.

மொத்தம் 21 போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடந்து இப்போது 8 போட்டியாளர்கள் தான் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.

இவர்களில் வெற்றியாளர் யாராக இருப்பார் என மக்களே ஒரு கணக்கு போட்டு வருகிறார்கள்.

எலிமினேஷன்
இந்த நேரத்தில் தான் வார இறுதி வந்துவிட்டது, அதாவது எலிமினேஷன் என்ற முக்கிய விஷயம் நடக்க இருக்கிறது.

இதுவரை வந்த ஓட்டிங்படி ரச்சிதா மற்றும் ஷிவின் இருவர் தான் ஓட்டுகள் குறைந்து காணப்படுகின்றனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருப்பது ரச்சிதா என கூறுகின்றனர்.

இந்த எலிமினேஷன் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் உள்ளது.