கணவருடனான விவாவகரத்து குறித்து மனம் திறந்து பேசிய தொகுப்பாளினி ரம்யா

தொகுப்பாளினி ரம்யா
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது, அந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்க தொகுப்பாளர்கள் அதிகம் இருந்தார்கள்.

அப்படி இருந்த தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ரம்யா, இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும்.

ஆனால் இப்போது தொலைக்காட்சியில் அதிகம் வருவதில்லை, மாறாக தனியாக வரும் தனியார நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழா என தொகுத்து வழங்குகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவை வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார்.

விவாகரத்து பற்றி பிரபலம்
அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தொகுப்பாளினி ரம்யாவிடம் அவரது விவாகரத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், அது ஒரு 6 வருடத்திற்கு முன் நடந்த ஒரு விஷயம் எனக்கே நியாபகம் இல்லை. கண்டிப்பா வருத்தம் இருந்தது, Depression இருந்தது.

எனக்கு ஏன் முதலில் இப்படி நடந்தது, எதுவும் தெரியாமல் என்னை மற்றவர்கள் ஏன் தவறாக பேசுகிறார்கள் என நிறைய வருத்தமாக இருந்தது.

இந்த தாக்கத்தில் இருந்து வெளியாக எனக்கு 6 முதல் 8 மாதம் ஆனது, ஆனால் இந்த ஒரு விஷயத்தில் இருந்து வெளியே வரும்போது எனக்கு தைரியம் கிடைத்தது என பேசியுள்ளார்.