கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓராண்டுக்கு முன்னதாக ஒன்றாரியோ பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட 28 வயதான கிரெக் பெரிச்சாலா என்ற அதிகாரி இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

வாகனமொன்று குழியில் வீழ்ந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு அவர் சென்றுள்ளார்.

இதன்போது இரண்டு பேர் ;பாலிஸ் உத்தியோகத்தரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்படைய ஆண் மற்றும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

என்ன காரணத்தினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.