சேது படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?

தமிழ் திரைத்துறையில் நவரச நாயகன் என அழைக்கப்படுபவர் கார்த்திக். இவர் 1981 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் படத்தில் பேசும் வசனம் மற்றும் ஸ்டைலான நடிப்பினால் இவருக்கு அதிக பெண் ரசிகர்கள் குவிந்தனர். திரைத்துறையில் சற்று விலகி இருந்த கார்த்திக் தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படமா
1999 -ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், சேது படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்கவிருந்தது நவரச நாயகன் கார்த்திக் தானாம். இப்படத்திற்காக கார்த்திக் அதிக சம்பளம் கேட்டதால் படத்தில் நடிக்க முடியாமல் போனது என தகவல் வெளியாகிவுள்ளது.