உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த மெஸ்ஸி

2022 உலகக் கிண்ண இறுதிப்போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் என ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு ஆர்ஜென்டீன அணி தகுதி பெற்றுள்ள நிலையில் அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி இதைத் தெரிவித்துள்ளார்.

2022 உலகக் கிண்ணப் போட்டி
நேற்று நடைபெற்ற குரோஷியாவுடனான அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீன 3:0 விகிதத்தில் வெற்றியீட்டியது.

பெனல்ட்டி மூலம் மெஸ்ஸி கோல் புகுத்தியதுடன், ஜூலியன் அல்வாரெஸ் அடித்த ஆர்ஜென்டீனாவின் 3 ஆவது கோலுக்கு மெஸ்ஸி அபார பங்காற்றியிருந்தார்.

தனது 5 ஆவது உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் விளையாடும் மெஸ்ஸி, இதுவரை 11 கோல்களை அடித்து ஆர்ஜென்டீனாவுக்காக உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராகவும் திகழ்கிறார்.

தனது ஓய்வை அறிவித்த மெஸ்ஸி
இந்நிலையில் தனது ஓய்வு தொடர்பில் மெஸ்ஸி தெரிவித்ததாவது,

என்னுடைய உலககோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலககோப்பை இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அது வரை என்னால் விளையாட முடியுமா என தெரியாது. விளையாடினாலும், இப்படி சிறப்பாக செயல்பட்டு, அணியை இறுதி போட்டி வரை கொண்டு செல்வேனா என்றும் தெரியாது.

எதிர்வரும் 18ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்.

சாதனை
உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக 11 முறை கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார். தனது சாதனை குறித்து பேசிய மெஸ்ஸி,

சாதனைகள் படைத்தது மகிழ்ச்சி தான். ஆனால், உலககோப்பையை வெல்வதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். அது தான் அனைத்தையும் விட மிகவும் அழகானது. இன்னும் நாங்கள் ஒரு அடி அருகே தான் இருக்கிறோம். இறுதிப் போட்டியில் இன்னும் ஒரு முறை கடுமையாக போராடுவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இம்முறை கனவை நினைவாக்க பாடுபடுவோம் என்று மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.