சவாரியின் போது படகு கவிழ்ந்த்மையால் மூன்று சிறுமிகள் மாயம்!

சூரியவெவ-மஹாவெலிகடஆர வாவியில் சவாரியின் போது படகு கவிழ்ந்ததில் பதின்ம வயது மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது படகில் 8 பேர் பயணித்துள்ளதாகவும், படகில் பயணம் செய்த குழந்தை உட்பட 5 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன மூன்று சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

8 மாத குழந்தை கவலைக்கிடம்
நீரில் மூழ்கி மீட்கப்பட்ட 8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18, 17 மற்றும் 10 வயதுடைய பெண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் உறவினர் நிகழ்வு ஒன்றிற்காக இந்த பகுதிக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் வாவியின் நடுவே படகு கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.