நாட்டின் சில பகுதிகளில் பன்னிரண்டு மணி நேர நீர் வெட்டு!

களுத்துறையின் சில பகுதிகளில் நாளை (21) காலை 8.30 மணி முதல் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இது தவிர நாகொட, பொம்புவல, பிலமினாவத்தை, பயாகல, மகொன, அளுத்கம, தர்கா சிட்டி மற்றும் பெந்தர ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.