இந்தியாவில் குறைவடையும் கொரொனோ தொற்று!

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து விட்ட நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் புதிதாக 13,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 16-ந் தேதி பாதிப்பு 8,813 ஆக இருந்தது. அதன் பிறகு 9,062, 12,608, 15,754 என தொடர்ந்து 3 நாட்களாக பாதிப்பு உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 27 ஆயிரத்து 890 ஆக உயர்ந்தது. அதேநேரம் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 13,900 பேர் குணமாகினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 99 ஆயிரத்து 435 ஆக உயர்ந்தது.

தற்போது 1,01,166 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 664 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 36 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,27,289 ஆக அதிகரித்துள்ளது.