இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய – பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலாளர் சந்திப்பு
இவரது பிரதிநிதியான ஹனா சிங்கருடன் இணைந்து நேற்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் க.மகேசனை சந்தித்துள்ளார்.

இதனையடுத்து தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஆகஸ்ட் 16ம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.