பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மொபைல்போன், காப்பீட்டு ஆவணங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன் வெளியேற தயாராக வேண்டும் என 3 மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆயுவு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானிய மக்கள் வெப்ப அலையால் கடும் அவதிக்குள்ளாகியிருந்த நிலையில், நேற்றும் இடி மின்னலுடன் பெருமழை நேற்று கொட்டித் தீர்த்துள்ளது.

இந்த நிலையில், வாகன நெரிசல், மின்சாரம் துண்டிப்பு உட்பட நெருக்கடிக்கு மக்கள் உள்ளாகக் கூடும் எனவும் ஆபத்தான பெருவெள்ளம் ஏற்படப் போவதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அவசரமாக வெளியேறும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் நேற்றும் இன்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, கார்ன்வாலில் நேற்று, வாகன ஓட்டிகள் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் வழியாகப் போராடினர், அதே நேரத்தில் வடமேற்கில் இரண்டு அங்குல மழை பெய்யக் கூடும் என அச்சம் தெரிவித்திருந்தனர்.

இதன்போது ரிச்மண்ட், சிஸ்விக் மற்றும் புட்னி உள்ளிட்ட தேம்ஸ் அருகே மேற்கு லண்டனின் பகுதிகளுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.