ரணில் மீதான நம்பிக்கை குறித்து பெருமிதம் கொள்ளும் ஆசாத் சாலி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தாம் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை ஆசாத் சாலி பெருமிதம் வெளியிட்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு மாதத்தில் நாட்டில் பெரும் மாற்றத்தை ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு குடும்பமே நாட்டை வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவதிபட்டு வந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற ஒரே மாத்தில் மக்களிற்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.