தனது காதலை நிரூபிக்க சிறுமி மேற்கொண்ட வினோத செயல்

அசாம் மாநிலத்தில் சூல்குச்சி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி முகநூல் மூலம் இளைஞன் ஒருவரிடம் பழகி கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

இளைஞன் மேல் இருந்த காதலில் பல முறை வீட்டை விட்டு அந்த இளைஞனுடன் சென்றுள்ளார். அப்படிச் செல்லும்போது எல்லாம் சிறுமியின் பெற்றோர்கள் திரும்பி அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியின் காதலனுக்கு HIV பாதிப்பு இருந்துள்ளது. சிறுமி தனது காதல் உண்மை என்பதை நிரூபிக்க அந்த காதலனின் HIV பாதிக்கப்பட்ட ரத்தத்தை ஊசியின் மூலம் தனது உடம்பில் செலுத்திக் கொண்டுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதோடு பலரும் இந்த செயலை பைத்தியக்காரா தனம் என்றும் இந்த வயதில் காதலின் அர்த்தம் தெரியாமல் நடந்துகொள்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளனர்.

அத்தோடு அந்த சிறுமியின் செயல் பெற்றோர்களுக்குத் தெரிந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவலர்கள் அந்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.