அரச நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

அரசாங்கத்தின் நான்கு முக்கிய நிறுவனங்களுக்கு புதிய பிரதானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இதற்கமைய,தேசிய வருமான திணைக்களத்தின் பணிப்பாளராக டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சியும் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக பி.பீ.எஸ்.சி. நோனிசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் திறைச்சேறிகள் பிரதி செயலாளராக டபிள்யு.ஏ.சத்குமாரவும் தகவல் தொழிநுட்ப முகாமை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜூட் நிலுக்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதன்படி இந்த நியமனங்களுக்கான அமைச்சரவைப் பத்திரம் நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சரைவை பேச்சாளர் தெரிவித்தார்.