பிரான்ஸில் குரங்கு அம்மை தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

பிரான்ஸில் குரங்கு அம்மையை கடுப்படுத்த தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23-ம் திகதி அறிவித்தது.

இந்நிலையில், பிரான்ஸில் அதிக திறன் கொண்ட குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டுமே 1,567 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பதும், தலைநகர் பாரிஸில் மட்டும் 726 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரான்ஸில் 1,700-க்கு மேற்பட்டோர் குரங்கு அம்மை தாக்குதலுக்கு ஆளாகியுஃப்ள்ளனர். இந்த நிலையில்தான் அங்கு குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.