நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொண்டார் வஜிர அபேவர்தன

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியிருந்தது.

இதன்போது வஜிர அபேவர்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வஜிர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.