நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3215 சந்தேக நபர்கள் கைது!

மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3215 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தழ்துவ தெரிவித்துள்ளார்.

அத்தோடு இது வரையில் 858 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 1176 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.