மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் பற்றிய அறிவிப்பு

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் பற்றிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் எவ்வளவு நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெளிவுபடுத்தியுள்ளார்.

மின் துண்டிப்பு

கொழும்பில் நடைபெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”எதிர்வரும் நாட்களில் மூன்று மணித்தியாலங்களுக்கு குறைந்த அளவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால திட்டம்
இதேவேளை, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் விநியோகத்தை கிரமமான முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தெரிவு செய்யப்பட்ட சில தனியார் துறையினரை பதிவு செய்து அவர்களின் ஊடாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.