யானையின் தாக்குதால் பலியான 6 மாத குழந்தை

யானை ஒன்றின் தாக்குதலில் 6 மாத குழந்தை ஒன்று நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஒலுவில் பள்ளக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதக் குழந்தையே இவ்வாறு யானை தாக்குதலினால் உயிரிழந்துள்ளது.

யானை தாக்குதல்

பள்ளக்காடு பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை தங்கியிருந்து செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவதினமான மாலை 5 மணியளவில் அந்த பகுதியிலுள்ள மரத்தின் கீழ் குழந்தையை படுக்க வைத்து விட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

சம்பவம்

இதன்போது அப்பகுதிக்கு திடீரென வந்த யானை மரத்தின் கீழ் படுத்திருந்த குழந்தையை தாக்கியதுடன் காயமடைந்த குழந்தை அங்கிருந்து மீட்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குழந்தை யானை தாக்குதலினால் ஏற்கனவே இறந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.