யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு இன்றைய தினம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது

எரிபொருள் அட்டை அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு இன்றைய தினம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க.மகேசனின் அறிவுறுத்தலுக்கமைய, கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அவர்களது பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் முன்னர் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம்

குறித்த எரிபொருள் அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதல் கட்டமாக விவசாயிகளின் தேவை அளவின் 25 சதவீத மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது.

எரிபொருள் அட்டை

இதேவேளை, எரிபொருள் அட்டை இல்லாத விவசாயிகள் தமது பிரதேச கமநல சேவைகள் நிலையத்தில் விண்ணப்பித்து எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு எரிபொருள் அட்டையை பெற்றுக்கொண்ட பின்னரே தமக்கான மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.