கர்ப்பிணி மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய கணவரை , பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 17ஆம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் கைதான 26 வயதான கணவர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்காக, வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.