இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நாகசைத்தன்யா

நடிகை சமந்தாவுடன் விவகாரத்து செய்த பிறகு நாகசைத்தன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும், அவரது காதல் மனைவியும் நடிகையுமான சமந்தா ரூத் பிரபுவும் கடந்த அக்டோபர் 02 தேதி ஒருமனதாக பிரிந்ததாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

சமந்தா – நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் என பல யுகங்கள் கிளப்பியது.

எனினும், இதுவரை தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருவரும் மௌனம் காத்து வருகின்றனர்.

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் நாகசைத்தன்யா
இந்த நிலையில் நடிகர் நாகசைத்தன்யா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவர் நடிகை இல்லை என்றும் தெரியவந்துள்ளது. விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் அறிவிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இது சமந்தாவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.