ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.