சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் விபத்து .. சிறுமி பலி

சட்டவிரோதமாக வைத்திருந்த வெடி மருந்து விபத்தில் 10 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்,  ஆறுதெங்கன்வினை பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் தனது வீட்டிலேயே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவரின் வீட்டில் வைத்திருந்த  வெடி மருந்து திடீரென வெடித்தது.

இதில், அவரின் 10 வயது மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மனைவி பார்வதி படுகாமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பார்வதியை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.