பொலிஸாரால் முற்றுகை இடப்பட்ட பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம்

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 15 பெரல் கோடா, 65 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.