நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைவாரா சமந்தா..!!

சமந்தா – நாக சைதன்யா இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

4 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும், கடந்த வருடம் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரியப்போகிறோம் என்று அறிவித்தனர்.

மேலும், மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்று சில செய்திகள் வெளிவந்தாலும், இதுவரை அப்படி எந்த ஒரு உறுதியான தகவலும், சமந்தா – நாக சைதன்யாவின்டம் இருந்து வரவில்லை.

இந்நிலையில், இந்த விஷயம் நடக்க வாய்ப்பே இல்லை என்று உணர்த்தும் வகையில், சமந்தாவின் சமீபத்திய செயல் அமைந்துள்ளது.

அதன்படி, அவர் தனது திருமண புடவையை நாக சைதன்யாவின் குடும்பத்தினரிடமே மீண்டும் கொடுத்துவிட்டாராம்.

இந்த அதிர்ச்சியளிக்கும் செயல் முலம், சமந்தா – நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணையப்போவதில்லை என்று அழுத்தமாக தெரியவந்துள்ளது.