மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடு தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பகல் வேளையில் ஏ, பி மற்றும் சி வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 38,400 மெற்றிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் இன்று வந்தடையவுள்ளதாகவும், ஆனால் நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான உலை எண்ணெய் தாங்கிய கப்பலை அடுத்த வாரம் வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.