நாட்டில் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் கட்டுப்பாடு விதிப்பு!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எரிபொருளை கொள்வனவு செய்யும் போது தலா ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாவுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக ஆயிரம் ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படுவதுடன் கார்கள் மற்றும் பேருந்துகளுக்கு அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாவுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.

நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்யும் போது, இப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.