வெளிநாடு செல்வோர் தொடர்பில் யாழ். போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ள விடயம்

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த நாட்களில் இடம்பெற்று வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.