இலங்கைக்கு உதவ தயார் நிலையில் இருக்கும் சர்வதேச நாணய நிதியம்

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துக்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு பிரயோகிக்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு தான் எதிர்ப்பதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.