ஜனவரி மாதம் இலங்கைக்கு படையெடுத்துள்ள அதிகளவு சுற்றுலா பயணிகள்… வெளியான முக்கிய தகவல்!

ஜனவரி மாதம் இலங்கைக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மாதம் மாத்திரம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை 76 ஆயிரத்து 536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.