தமிழக நட்சத்திர ஓட்டல்களில் இரவு நேரத்தில் பார் செயல்படும் நேரம் அதிகரிப்பு!

தமிழகத்தில் இரவு நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் நட்சத்திர ஓட்டல்களில் பார் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகரப்பகுதிகளில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்படுகின்றன. இந்த ஓட்டல்களுடன் இணைந்து மது அருந்தும் பார்களும் செயல்படுகின்றன. இதே போல் மனமகிழ்மன்றங்கள், சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல்களிலும் பார்கள் செயல்படுகின்றன.

இந்த பார்கள் காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை செயல்படும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த பார்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. தற்போது இரவு நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் நள்ளிரவு 12 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் பார்கள் செயல்பட நேரக்கட்டுப்பாடு எதுவும் கிடையாது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மது விலக்கு மற்றும் கலால்துறை ஆணையர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.