தனுஷ் ஜஸ்வர்யாவை சேர்த்து வைக்க கோரிய ரசிகர்களுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறிய பதில்

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு தொடர்பில் லட்சுமி ராமகிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷுக்கும், ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவுக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர், இது குறித்து தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணாவுக்கு டேக் செய்த ரசிகர் ஒருவர், அம்மா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? இருவரையும் சேர்த்து வையுங்கள் என பதிவிட்டார் (சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் செய்வது போல பண்ணுங்க என்பதையே அவர் குறிப்பிட்டார்).

அதற்கு பதில் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், அவர்கள் இருவரும் மரியாதையுடன் விலகிச் செல்கிறார்கள். சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்வதற்கு முன்பு ஒருவரையொருவர் பகிரங்கமாக மோசமாகப் பேசுவதோ அல்லது வேறொருவருடன் காதல் செய்வதன் மூலமோ மன உளைச்சலை ஏற்படுத்துவதோ போன்ற செயல்களை செய்யாமல் பிரிகின்றனர். தயவுசெய்து அவர்களை தனியாக விட்டு விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.