இங்கிலாந்தில் உச்சமடையும் கொரோனோ

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,46,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1.43 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசால் 313 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,50,057 ஆக உள்ளது.

மேலும் 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.